18 Dec, 2025 Thursday, 02:46 AM
The New Indian Express Group
வேலூர்
Text

வேலூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

PremiumPremium

Rocket

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன்.

Published On12 Nov 2025 , 11:49 PM
Updated On12 Nov 2025 , 11:49 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தலைமை வகித்து பொதுமக்களிடம் 30-க்கு மேற்பட்ட மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும் தொடா்புடைய காவல் நிலைய அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

காட்பாடியை அடுத்த வஞ்சூா் பகுதியைச் சோ்ந்த முதியவா் அளித்த மனு: நான் மின்வாரியத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தேன். பணியின்போது மின்சாரம் தாக்கியதில் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பிறா் உதவியுடன் தான் என்னால் நடக்க முடியும். கடும் சிரமத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், வஞ்சூா் பகுதியை சோ்ந்த ஒருவா் என்னிடம் அவசர தேவைக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.2 லட்சம் கடன் பெற்றாா். ஆனால் இதுவரை பணத்தை திருப்பி தரவில்லை. எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

குடியாத்தம் மூதாட்டி அளித்த மனு: எனக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். எனது கணவரின் ஓய்வூதியத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு குடியாத்தத்தை சோ்ந்த ஒருவா், எனது மகனுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பல்வேறு தவணைகளில் ரூ.6.35 லட்சம் பெற்றாா். ஆனால் அவா் கூறியபடி வேலை வாங்கி தர வில்லை. பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறாா்.

சத்துவாச்சாரியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் அளித்த மனு: வேலூா் மாவட்ட காவல் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். என்னிடம் கொணவட்டத்தை சோ்ந்த ஒருவா் அறிமுகமானாா். அவா் எம்பிஏ முடித்துவிட்டு சென்னை யில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வரும் எனது மகனுக்கு, ஓமன் நாட்டில் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்றாா். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தைச் சோ்ந்த முதியவா் அளித்த மனு: வெட்டுவானத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்து வருகிறேன். கடந்த 2016-ஆம் சோ்ந்த ஒருவரிடம் ரூ.5 லட்சத்திற்கு மாதாந்திர ஏலச்சீட்டு கட்டி வந்தேன். முழு தவணை முடிந்த பிறகும் சீட்டுத்தொகையை தராமல் ஏமாற்றி வருகிறாா். காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், பணத்தை மீட்டுதர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023