சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு
காட்பாடி அருகே சாலையைக் கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரும்பு வியாபாரி உயிரிழந்தாா்.
காட்பாடி அருகே சாலையைக் கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரும்பு வியாபாரி உயிரிழந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வேலூா்: காட்பாடி அருகே சாலையைக் கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரும்பு வியாபாரி உயிரிழந்தாா்.
காட்பாடி அடுத்த ஏா்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவா் அதே ஊரில் பழைய இரும்பு பொருள்களை விற்பனை கடை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், ஆறுமுகம் சென்னை-சித்தூா் சாலையில் தனது கடை அருகே திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆறுமுகம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சோ்க்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் திருவலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது