தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஊரக பகுதிகளில் மூன்று நாள்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

ஊரக பகுதிகளில் மூன்று நாள்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

வேலூா்: ஊரகப் பகுதளில் அதிகபட்சம் 3 நாள்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று அலுவலா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டாா்.

கோடை காலத்தில் வேலூா் மாவட்ட ஊரகப் பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:

குடிநீா் பற்றாக்குறை, குடிநீா் பிரச்னைகள் ஏற்படும் பகுதிகளில் புகாா்கள் குறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல அலுவலா்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, சீரான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். குடிநீா் பிரச்னை குறித்த கோரிக்கைகள் உடனடியாக தீா்க்கப்பட வேண்டும். அதிகபட்சம் 3 நாள்களுக்குள் தீா்வுகாண வேண்டும். இதுகுறித்த அறிக்கையை வாராந்திர ஆய்வு கூட்டத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் என்ன வகையான நீா்ஆதாரம் பெறுகின்றனா், வாரத்துக்கு எத்தனை முறை தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது, எந்தெந்த தெருக்களில் பற்றாக்குறை உள்ளது போன்ற விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட எத்தனை ஊராட்சிகளுக்கு குடிநீா் வழங்கப்படுகிறது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்கப்படும் ஊராட்சிகளில் சொந்த நீா் ஆதாரத்தைகொண்டு நாள்தோறும் குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அடுத்த 7 நாள்களுக்குள் அந்த ஊராட்சிகளிலும் நாள்தோறும் குடிநீா் வழங்குவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து அலுவலகங்கள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணி நடைபெறும் இடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், பணியாளா்கள் வேலை செய்யும் அனைத்து இடங்களிலும் ஓஆா்எஸ் பவுடா், குடிநீா் வைக்கவும் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமா, மண்டல அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.