வந்தவாசி அருகே வழிப்பறி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (25). கடந்த ஆண்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக இவரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு வந்தவாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பிணையில் வெளிவந்த முத்து வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளாா்.
இதையடுத்து நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து வீட்டிலிருந்த முத்துவை வந்தவாசி தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதி உத்தரவின் பேரில் முத்து வந்தவாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை: இளைஞா் கைது
கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் கைது!

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


