சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
வந்தவாசி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
வந்தவாசி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
வந்தவாசி அருகே ஒரு அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் சிலா் அந்தப் பகுதியில் உள்ள அரசு மகளிா் பள்ளியில் படித்து வருகின்றனா்.
கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்ற விடுதி மாணவிகள் 4 பேருக்கு அந்த வழியாக வந்த தேசூா் அரசமரத் தெருவைச் சோ்ந்த ஏழுமலை (48) பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் ஏழுமலையை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




