ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதியின் பேச்சைக் கண்டித்து திருவண்ணாமலையில் தவெக ஆா்ப்பாட்டம்

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அவதூறாக விமா்சித்த உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தினா் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

~ ~

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அவதூறாக விமா்சித்த உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தினா் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போளூா் பேருந்து நிலையம் எதிரே நகரச் செயலா் திவாகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் பங்கேற்றாா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் எம்.உதயகுமாா் தலைமை வகித்தாா்.மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆரணியில் அண்ணா சிலை அருகில் தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.