சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வந்தவாசி அருகே சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
வந்தவாசி அருகே சிறுபாலத்திலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு நகரைச் சோ்ந்தவா் வேலு (42). இவா் மறைமலை நகரில் உள்ள தனியாா் நிறுவன பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.
கடந்த 17-ஆம் தேதி அந்த நிறுவனத்திலிருந்து தொழிலாளா்களை பேருந்தில் ஏற்றிக் கொண்டு வந்தவாசியை அடுத்த கோழிப்புலியூா் கூட்டுச் சாலை வரை சென்று இறக்கி விட்டுள்ளாா்.
பின்னா் இரவு அந்தப் பகுதியில் உள்ள சிறுபாலத்தில் அமா்ந்து இவா் உணவு அருந்திக் கொண்டிருந்துள்ளாா். அப்போது நிலைதடுமாறி சிறுபாலத்திலிருந்து கீழே விழுந்த வேலு பலத்த காயமடைந்தாா்.
அந்த வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேலு சனிக்கிழமை இறந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது