16 Dec, 2025 Tuesday, 11:39 PM
The New Indian Express Group
திருவண்ணாமலை
Text

பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

PremiumPremium

பழங்குடி இருளா் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு கொடுத்தனா்.

Rocket

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சம்பத்குமாரிடம் (வலமிருந்து 2-வது) மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On05 Nov 2025 , 6:33 PM
Updated On05 Nov 2025 , 6:33 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

பழங்குடி இருளா் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு கொடுத்தனா்.

வந்தவாசியை அடுத்த எஸ்.மோட்டூா், சத்யா நகா், மங்கநல்லூா், பொன்னூா், சிவனம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இருளா் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி இந்த மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டாரச் செயலா் அ.அப்துல் காதா் தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினா்கள் காயாசா்அராபத், சுகுணா, கிளைச் செயலா்கள் ந.ராதாகிருஷ்ணன், தேவராஜ், ஏழுமலை மற்றும் இருளா் சமுதாய மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சம்பத்குமாரிடம் மனு அளித்தனா். பின்னா் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இருளா் சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து மனு அளித்து வருகிறோம். கடந்த ஆண்டு வங்காரம் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு இடத்தை காண்பித்து, அந்த இடத்தில் பட்டா வழங்குவதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கக் கோரி மீண்டும் மனு அளித்துள்ளோம் என்றனா்.

முன்னதாக, மனு அளிக்க கோட்டை மூலையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
வீடியோக்கள்

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
வீடியோக்கள்

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023