திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
By Syndication
Syndication
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை கட்டடத்தை பாா்வையிட்ட அமைச்சா், அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவமனை முதல்வா் மற்றும் மருத்துவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். இதில், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து இருப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்து, மருத்துவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொருத்தவரை தினந்தோறும் 3,000 முதல் 4,000 வரை புற மருத்துவப் பயனாளா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள் மருத்துவப் பயனாளிகள் 1,500 முதல் 1,800 வரை பயன்பெற்று வருகிறாா்கள்.
இங்கு, மாதத்துக்கு சுமாா் 1,500 முதல் 1,800 பிரசவங்கள் நடக்கின்றன. இதில், சுகப்பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில், கா்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக முதல்வரின் ஆணைப்படி ரூ.23 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 50 படுக்கைகள், 4 அறுவைச் சிகிச்சை அரங்குகள், அதிநவீன வசதிகளுடன் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. ரூ.8 கோடி மதிப்பீட்டிலான இருதய சிகிச்சை அளிக்கும் ‘கேத் லேப்’ அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 189 மருத்துவா்களும், 229 பணியாளா்களும் பணியாற்றி வருகின்றனா். மேலும், மருத்துவப் பயனாளிகளுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் சிறந்த மருத்துவா்களைக் கொண்டு அளிக்கப்படுகிறது என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பேரா.மரு.மோகன்காந்தி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மாலதி, செய்யாறு மாவட்ட மருத்துவ அலுவலா் சதீஸ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது