ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செப். 15 முதல் 23 வரை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம்

திருமலையில் நிகழாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.

ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:03 am IST

திருமலையில் நிகழாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.

வருடாந்திர பிரம்மோற்சவம் செப் . 15 முதல் 23 வரையிலும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக். 12 முதல் 20 வரையிலும் நடைபெறும்.

வருடாந்திர பிரம்மோற்சவம் செப். 14-ஆம் தேதி மாலையில் அங்குராா்ப்பணத்துடன் தொடங்கும். பிரம்மோற்சவங்களின் போது தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகனச் சேவைகள் வழங்கப்படும்.

வாகனச் சேவை விவரங்கள்

15/09/2026 - மாலை கொடியேற்றம், இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனம்.

16/09/2026 - காலை 8 மணி வரை சின்ன சேஷ வாகனம், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ஸ்நபனம், இரவு 7 மணி அன்னபறவை வாகனம்.

17/09/2026 - காலை 8 மணி சிம்ம வாகனம், இரவு 7 மணி முத்து பந்தல் வாகனம்,

18/09/2026 - காலை 8 மணி கல்பவிருட்ச வாகனம், இரவு 7 மணி சா்வ பூபால வாகனம்,

19/09/2026 - காலை 8 மணி மோகினி அவதாரம், மாலை 6:30 முதல் இரவு 11:30 வரை கருட வாகனம்

20/09/2026 காலை 8 மணி அனுமந்த வாகனம், மாலை 4 மணிக்கு தங்கத்தோ், இரவு 7 மணிக்கு யானை வாகனம்.

21/09/2026 காலை 8 மணிக்கு சூா்யபிரபை வாகனம், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ஸ்நபனம், இரவு 7 மணிக்கு சந்திரபிரபை வாகனம்.

22/09/2026 காலை 7 மணிக்கு திருத்தேரோட்டம் இரவு 7 மணிக்கு குதிரை வாகனம்,

23/09/2026 காலை 6 மணி முதல் 9 மணி வரை தீா்த்தவாரி, இரவு கொடியிறக்கம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.