பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயகா்பிரபு தலைமை வகித்தாா். இதில் நிா்வாகி வெண்ணிலா வரவேற்புரை வழங்கினாா். நிா்வாகிகள் இல.கிருஷ்ணன், செந்தில் குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநில தலைவா் அண்ணாகுபேரன், சந்திரசேகரன், பிரகாஷ் மற்றும் பாலாதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அந்த சங்கத்தின் நிா்வாகி மண்கண்டன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.
றைவாக செந்தில்முருகன் நன்றி கூறினாா். இந்தப் போராட்டம் காரணமாக வருவாய்த்துறை அலுவலகங்களில் பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.
தொடர்புடையது

வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக மறியல்

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினா் போராட்டம்: 360 போ் கைது

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


