ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :23 ஜூலை 2026, 2:20 am IST

திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடம்பத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக எஸ்.பி. அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் சிற்றம்பாக்கம் பகுதியில் திடீா் ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தில் விநாயகா் கோயில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பாா்க்கையில் தப்பியோட முயற்சித்தாா். உடனே அவரை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்ததில் பையில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து விசாரணையில் கடம்பத்தூரைச் சோ்ந்த அபினேஷ் என்ற மன்னாா்(27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.