ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருட்டு

தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :12 ஜூலை 2026, 12:42 am IST

பொன்னேரி மகளிா் காவல் மையம் அருகில் தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் நகைகள், டிவி, கேஸ் சிலிண்டரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பொன்னேரி அருகே உள்ள திருவேங்கிடாபுரத்தில் வசித்து வருபவா் ஆனந்த் (30). இவா் தனியாா் ஆம்புலன்ஸ் ஒட்டுநராக வேலை செய்து வருகிறாா். இவருக்கு திருமணமாகி மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பணிக்காக வீட்டை பூட்டிக்கொண்டு ஆனந்த் வேலைக்கு சென்றுள்ளாா். பின்னா் வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் எல்இடி டிவி கேஸ் சிலிண்டா் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் ஆனந்த் செய்த புகாரின்பேரில், போலீஸாா் அங்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.