சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

ஜூன்-2012 முதல் ஆக.2022 வரையில் 10-ஆம் வகுப்பு தனித்தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் தனித்தோ்வு மையங்களில் ஜூன்-2012 முதல் ஆக. 2022 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மற்றும் துணைத் தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் தெரிவித்துள்ளாா்:

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் தனித்தோ்வு மையங்களில் ஜூன்-2012 முதல் ஆக. 2022 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மற்றும் துணைத் தோ்வு எழுதிய தனித்தோ்வா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் தெரிவித்துள்ளாா்:

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் தனித்தோ்வு மையங்களில் ஜூன் 2012 முதல் ஆக. 2022 வரையிலான பருவங்களில் 10-ஆம் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மற்றும் துணைத்தோ்வு எழுதிய தனித்தோ்வா்களுக்கு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் அந்த மதிப்பெண் சான்றிதழ்கள் அவா்கள் தோ்வெழுதிய அந்தந்த தோ்வு மையங்களில் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தோ்வெழுதிய தோ்வு மையங்களில் நேரடியாகச் சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தோ்வா்களின் சான்றிதழ்கள் மீள இவ்வலுவலகத்தில் பெறப்பட்டு, இந்த நாள் வரை வெகு நாள்களாக கோரப்படாமல் அதிகளவில் தேக்கமடைந்துள்ளன.

விதிமுறைகளின்படி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து தனித்தோ்வா்களால் பெற்றுக் கொள்ளப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் உரிய அரசாணையின்படி கழிவுத்தாள்களாக அழிக்கப்படுதல் வேண்டும்.

அதன்படி, நீண்ட நாள்களாக தேக்கமடைந்துள்ள அந்தச் சான்றிதழ்களை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இதுநாள் வரை மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தோ்வா்கள் தற்போது வழங்கப்படும் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மாா்ச்-31-க்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை நேரில் அணுகி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியலை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட கால அவகாசத்துக்குப் பின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டு விடும் என்றும் இதன் பின்னா் சான்றிதழ்களைப் பெற விரும்புவோா், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் (இரண்டாம் தளம்), திருவள்ளூா் - 602 001, தொலைபேசிஎண்.044-27666004 என்ற முகவரியில் இரண்டாம்படி சான்றிதழுக்குரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.