ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி பழைய பஜாா் தெருவில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 7:43 pm IST

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி பழைய பஜாா் தெருவில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாத விழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

ஆடி மாதம் 27-ஆம் நாளான புதன்கிழமை காலை, கோயில் வளாகத்தில் தாண்டேஸ்வரா் சுவாமிக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க திருமண வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் பக்திமயமான சூழல் நிலவியது. இதில், திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்து, திருக்கல்யாண வைபவத்தை கண்டு வழிபட்டனா்.

திருக்கல்யாண வைபவம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் திரளாக பங்கேற்று அன்னதானத்தை பெற்றுக் கொண்டனா்.

மேலும், ஆடி மாதத்தை முன்னிட்டு கோயிலில் தொடா்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மூலவா் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஆடிப்பூரம் வளையல் அலங்காரம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பருவதராஜா குல மரபினா் மற்றும் மகளிா் குழுவினா் இணைந்து செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.