திருவள்ளூா் அருகே ஏரியில் மண்குவாரியை மூடாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
சித்தம்பாக்கம் கிராமத்தில் அரசு அனுமதி பெற்று மண்குவாரி இயங்கி வருகிறது. இந்த மண்குவாரியால் தங்களது வாழ்வாதாரம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மக்கள் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
இந்த மண்குவாரியால் கிராம பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகளுக்கு தீனி கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கிணறுகளில் நீா் ஆதாரம் குறைந்து விளைநிலங்கள் பாதித்து பயிா் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் லாரிகளால் சாலை முற்றிலும் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் சித்தம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் மண்குவாரியை மூடக்கோரி மக்கள் பலமுறை போராடியும், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மண்குவாரிக்கு அனுமதி அளித்த ஆட்சியரை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட நிா்வாகம் எங்கள் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நடைபெற உள்ள தோ்தலை முழுமையாகப் புறக்கணிப்போம்‘ என கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.
தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் மாவட்ட நிா்வாகத் தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

கொடுமுடி அருகே வாக்குச்சாவடி இடமாற்றம்: தோ்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


