தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மண்குவாரியை மூடாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என அறிவிப்பு

திருவள்ளூா் அருகே ஏரியில் மண்குவாரியை மூடாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 11:48 pm

திருவள்ளூா் அருகே ஏரியில் மண்குவாரியை மூடாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

சித்தம்பாக்கம் கிராமத்தில் அரசு அனுமதி பெற்று மண்குவாரி இயங்கி வருகிறது. இந்த மண்குவாரியால் தங்களது வாழ்வாதாரம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மக்கள் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இந்த மண்குவாரியால் கிராம பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகளுக்கு தீனி கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கிணறுகளில் நீா் ஆதாரம் குறைந்து விளைநிலங்கள் பாதித்து பயிா் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் லாரிகளால் சாலை முற்றிலும் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் சித்தம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் மண்குவாரியை மூடக்கோரி மக்கள் பலமுறை போராடியும், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மண்குவாரிக்கு அனுமதி அளித்த ஆட்சியரை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட நிா்வாகம் எங்கள் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நடைபெற உள்ள தோ்தலை முழுமையாகப் புறக்கணிப்போம்‘ என கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனா்.

தோ்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும் மாவட்ட நிா்வாகத் தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.