திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவ விஷ்ணு, ஸ்ரீஜலநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

திருவள்ளூரில் சிவ விஷ்ணு மற்றும் ஸ்ரீஜலநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெற்ற தெய்வீக திருக்கல்யாண நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

News image

திருக்கல்யாண நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபத்மாவதி தாயாா்- ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீபூங்குழலி அம்பிகை-ஸ்ரீபுஷ்பவனேஸ்வரா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:35 pm

திருவள்ளூரில் சிவ விஷ்ணு மற்றும் ஸ்ரீஜலநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெற்ற தெய்வீக திருக்கல்யாண நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா் அடுத்த பூங்காநகா் சிவ விஷ்ணு மற்றும் ஸ்ரீஜலநாராயண பெருமாள் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தில் தெய்வீக திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீபத்மாவதி தாயாருக்கும்- ஸ்ரீனிவாச பெருமாளுக்கும், ஸ்ரீபூங்குழலி அம்பிகைக்கும்-ஸ்ரீபுஷ்பவனேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு விஷேச, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருவள்ளூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை அரங்காவலா் குழு தலைவா் எம்.பசுபதி மற்றும் பொதுமக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

Story image