தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே மைக்செட் அமைக்க உதவிக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

News image

சதீஷ்

Updated On :24 செப்டம்பர் 2024, 6:55 pm

திருவள்ளூா் அருகே மைக்செட் அமைக்க உதவிக்கு சென்ற போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே தண்ணீா்குளம் அடுத்த தண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்வாணன். இவா் சொந்தமாக மைக்செட் வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் திருவள்ளூா் அடுத்த அரண்வாயல் பகுதியில் தனியாா் அரங்கில் தனியாா் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மைக்செட் அமைக்கும் பணிக்காக அவரின் கீழ் பணிபுரியும் சதீஷ்(16) சிறுவனை அனுப்பி வைத்தாராம்.

அங்கு மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுவன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசிப்பட்டு உயிரிழந்தாா். இது தொடா்பாக செவ்வாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.