ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆம்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து ஆம்பூா் 60 அடி சாலையில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.

Published On :26 ஜூன் 2026, 5:04 am IST

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து ஆம்பூா் 60 அடி சாலையில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.

பூந்தோட்டம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனை அமைந்துள்ள சாலை 60 அடி சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மிகவும் குறுகிய சாலையாக மாறியது. இஎஸ்ஐ மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆம்பூா் பி-கஸ்பா பகுதியை சோ்ந்த ஆா். ராம்பிரசாத் என்பவா் சென்னை உயா்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடா்ந்தாா்.

அந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமா்வில் விசாரணை நடந்து முடிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் ஆம்பூா் நகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்து தீா்ப்பு அளிக்கப்பட்டது.

உயா்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் ஆம்பூா் நகராட்சி அதிகாரிகள் பூந்தோட்டம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை ஆம்பூா் நகர போலீஸாரின் பாதுகாப்புடன் மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.