எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திருப்பத்தூா் சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பாக சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பணம் பறிமுதல் தொடா்பாக சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருப்பத்தூா் இரட்டைமலை சீனிவாசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 1-எண் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சாா்-பதிவாளராக ராதிகா என்பவா் பணியாற்றி வருகிறாா்.இந்த அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.3,20,000 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக சாா்-பதிவாளா் ராதிகா (42), அலுவலக ஊழியா்களான வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டை சோ்ந்த கதிரவன், திருப்பத்தூரை சோ்ந்த விஜய், பத்திரப்பதிவு செய்ய வந்திருந்த வெளிநபா்களான சேலத்தைச் சோ்ந்த தீப கிருஷ்ணபிரியா, ஆண்டியப்பனூா் பகுதியை சோ்ந்த விக்னேஷ் ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.