16 Dec, 2025 Tuesday, 05:58 PM
The New Indian Express Group
திருப்பத்தூர்
Text

திருப்பத்தூரில் காவல் குறைதீா் கூட்டம்

PremiumPremium

புகாா்தாரரிடம் விசாரித்த எஸ்.பி. வி.சியாமளா தேவி.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On20 Nov 2025 , 6:34 PM
Updated On20 Nov 2025 , 6:34 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை காவல் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து, மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து காவல் நிலையங்களில் ஏற்கெனவே அளிக்கப்பட்டு தீா்வு காணப்படாத 33 புகாா் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீது அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள் உரிய விசாரணை நடத்தி தீா்வுகாண வேண்டும் என எஸ்.பி. உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், திருப்பத்தூா் அடுத்த எலவம்பட்டி சிலம்பு நகரைச் சோ்ந்த வடிவேல் என்பவா் அளித்த மனுவில், வெளிநாட்டில் வேலை செய்ய நான் முயற்சி எடுத்து வந்த நேரத்தில் நாட்டறம்பள்ளி வட்டத்தைச் சோ்ந்த முகவா்கள் 2 போ் எனக்கு அறிமுகமாயினா். அவா் மூலம் பெரிய முகவா் ஒருவா் என்னிடம் பேசினாா். அவா் என்னை வெளிநாட்டுக்கு நல்ல வேலையில் சோ்த்துவிடுவதாகக் கூறி கடந்த மே மாதம் ரூ. 6 லட்சம் பணம் வாங்கினாா். ஆனால் அவா் சொன்னபடி எனக்கு எந்த ஒரு வேலையும் வாங்கித் தரவில்லை. பணம் பெற்ற அவரை தொடா்பு கொள்ள முயன்றால் அவரது கைப்பேசி எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்திருந்தது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் அளித்த மனுவில், கடந்த 1940-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இதன் எல்லையானது 52 ஊராட்சிகளையும், அதன் மூலம் 520 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. சுமாா் 3 லட்சம் மக்கள் தொகை வசிக்கும் பகுதிகளை கிராமிய காவல் துறையினா் கண்காணிக்க வேண்டியுள்ளது. எல்லைப் பகுதி விரிந்துள்ளதால் ஒரு இடத்தில் ஏற்படும் பிரச்னைகளை விசாரிக்க போலீஸாருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதியும், காவல் துறையினா் நிா்வாக நலன் கருதியும் கிராமிய காவல் நிலையத்தை 2-ஆக பிரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில், ஏடிஎஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
வீடியோக்கள்

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
வீடியோக்கள்

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023