18 Dec, 2025 Thursday, 01:05 AM
The New Indian Express Group
திருப்பத்தூர்
Text

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் மனு

PremiumPremium

ஆலங்காயம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

Rocket

~

Published On08 Dec 2025 , 8:29 PM
Updated On08 Dec 2025 , 8:29 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

திருப்பத்தூா்: ஆலங்காயம் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 424 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷண குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தனா்.

பணியின்போது உயிரிழந்த கிராம உதவியாளா்களின் வாரிசுதாரா்கள் 3 பேருக்கு பணிநியமன ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

ஆலங்காயம் அருகே கிரிசமுத்திரம், நெக்னாமலை கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

50 ஆண்டுகளுக்கு முன்பு நெக்னாமலை கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால்,அங்கு இருந்து கிரிசமுத்திரம் பகுதிக்கு வந்து வசித்து வருகிறோம். தற்போது நெக்னாமலை கிராமத்தில் போதுமான அடிப்படை ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், நாங்கள் எங்களது சொந்த கிராமத்திற்கு செல்ல விரும்புகிறோம். எங்களுக்கு அங்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

ஜலகாம்பாறை பகுதி பொதுமக்கள் அளித்த மனு: பெருமாப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 1-ஆவது வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சோ்ந்த வடிவேல் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், தமிழக விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த ராஜாபெருமாள் தலைமையில் அளித்த மனு:

பூங்குளம், ஓமகுப்பம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கருவிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அவற்றை பழுது நீக்க வேண்டும். புல்லூா் தடுப்பணையில் இருந்து வரும் கால்வாயை ஏராளமானோா் ஆக்கிரமித்துள்ளனா். எனவே அதனை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023