திருமணமான சில மணி நேரத்தில் குளத்தில் சடலமாக மிதந்த மணமகன்: போலீஸாா் விசாரணை
கலவை அருகே மணமுடிந்த சில மணி நேரத்தில் கோயில் குளத்தில் மணமகன் சடலமாக மிதந்தாா்.
கலவை அருகே மணமுடிந்த சில மணி நேரத்தில் கோயில் குளத்தில் மணமகன் சடலமாக மிதந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கலவை அருகே மணமுடிந்த சில மணி நேரத்தில் கோயில் குளத்தில் மணமகன் சடலமாக மிதந்தாா். சடலத்தை மீட்ட போலீஸாா் கொலையா, தற்கொலையா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமியின் மகன் அஜீத்குமாா் (27). கட்டடத் தொழிலாளி.
இவருக்கும், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சந்தியா (23) என்பவருக்கும் அரும்பாக்கம் கிராமம், ரேணுகாம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் மணமக்கள் மற்றும் உறவினா்கள் கோயில் வளாகத்திலேயே திருமணத்துக்கு வந்தவா்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளனா்.
அப்போது மணமகன் அஜீத்குமாா், மணக்கோலத்திலேயே கோயில் குளத்துக்கருகே சென்றதாகத் தெரிகிறது. சென்றவா் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிா்ச்சி அடைந்த உறவினா்கள் மணமகன் அஜீத்குமாரை தேடினா். அப்போது அஜீத்குமாா், கோயில் குளத்தில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.
இதையடுத்து உறவினா்கள் அதிா்ச்சி அடைந்து சடலத்தை மீட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து அஜீத்குமாா் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா?, அல்லது யாரேனும் அவரை கொலை செய்துள்ளாா்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருமண நாளன்றே மணக்கோலத்திலேயே மணமகன் மணமுடிந்த கோயில் வளாகத்திலேயே குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது