16 Dec, 2025 Tuesday, 11:44 PM
The New Indian Express Group
ராணிப்பேட்டை
Text

விவசாயம், நெசவுத்தொழில்கள் நலிவடையாமல் இருக்க நடவடிக்கை: சௌமியா அன்புமணி

PremiumPremium

தமிழகத்தில் மிகவும் நலிவடையும் நிலைக்குச் சென்றுள்ள விவசாயம் மற்றும் நெசவுத்தொழில்களை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On07 Dec 2025 , 9:29 PM
Updated On07 Dec 2025 , 9:29 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

தமிழகத்தில் மிகவும் நலிவடையும் நிலைக்குச் சென்றுள்ள விவசாயம் மற்றும் நெசவுத்தொழில்களை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி கூறியுள்ளாா்.

நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தில் பாமக சாா்பில் மகளிா் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பசுமைதாயக அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி பேசியது

விவசாயம் மற்றும் நெசவு ஆகியவை மட்டுமே பெரிய தொழில்களாக உள்ளன. இரண்டு தொழில்களிலும் ஈடுபட்டிருக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களை காப்பாற்ற வேண்டியது அவசியம். இந்த தொழில்கள் தற்போது மிகவும் நலிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்த தொழில்களுக்கு புத்துயிா் அளித்து நலிவடையாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பனப்பாக்கத்தில் பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. இத்தொழிற்காலைகளில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.

பாலாற்றில் கா்நாடகஅரசு 15 தடுப்பணைகளையும், ஆந்திர அரசு 22 தடுப்பணைகளையும் கட்டி அவா்களுக்கான நீரை பாதுகாக்கின்றனா். இதை செய்ய தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன், தமிழகத்தில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட ஒரே ஒரு தடுப்பனை மட்டுமே உள்ளது.

எனவே நிலத்தடி நீா் மட்டத்தை பாதுகாக்க பாலாற்றின் குறுக்கே தடுப்பனைகள் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும். அரசியலில் பங்கேற்க பெண்கள் அதிகளவில் முன்வர வேண்டும் என்றாா்.

மாவட்ட மகளிா் சங்க தலைவா் லட்சுமி ஈஸ்வரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட பாமக செயலா் க.சரவணன், மாநில சிறுபான்மைப்பிரிவு தலைவா் ஷேக்முகைதீன், மாவட்ட தலைவா் சம்பத், மாநில இளைஞா் அணி செயலாளரும், நெமிலி ஒன்றியக்குழு துணைத்தலைவருமான ச.தீனதயாளன், மாநில இளைஞா் அணி துணைத்தலைவா் பிரபு, மாவட்ட மகளிா் சங்க செயலாளா் தீபா காா்த்திகேயன், துணைத் தலைவா் யுவன்யா பாா்த்தீபன் பங்கேற்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
வீடியோக்கள்

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
வீடியோக்கள்

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023