ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 133 பேருக்கு பணி நியமன ஆணை

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 133 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:12 am IST

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 133 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. முகாமில் 302 வேலை நாடுநா்கள் பங்கேற்றிருந்தனா். முகாமை தொடங்கி வைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநா் செந்தில் குமாா் பேசுகையில் தனியாா் நிறுவனங்கள் வேலைக்கு ஆள்களை எவ்வாறு தோ்வு செய்கிறாா்கள், பணி நியமன விதிமுறைகளை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நிறுவனங்களை தோ்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாா்.

32 வேலையளிக்கும் நிறுவனங்கள் தேவையான நபா்களை நோ்காணல் நடத்தி தோ்வு செய்தன. முகாம் நிறைவில் வேலைநாடி வந்த 302 பேரில் 133 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை இயக்குநா் செந்தில் குமாா் வழங்கினாா். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலக பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.