ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மல்லியங்கரணையில் ரூ. 2.42 கோடியில் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

உத்தரமேரூா் அருகே மல்லியங்கரணையில் 126 பயனாளிகளுக்கு ரூ. 2.42 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை வழங்கினாா்.

பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:20 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே மல்லியங்கரணையில் 126 பயனாளிகளுக்கு ரூ. 2.42 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே மல்லியங்கரணையில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, கூடுதல் ஆட்சியா் ஆஷிக் அலி, மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உத்தரமேரூா் வட்டாட்சியா் நடராஜன் வரவேற்றாா். முகாமில், வருவாய்த் துறை சாா்பில் 46 பயனாளிகளுக்கு ரூ. 56,20,865 மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், 24 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் திருமண உதவித் தொகை 24 பயனாளிகளுக்கு ரூ. 6,36,500 மதிப்பிலும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, 6 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், ரூ. 47,250 மதிப்பில் 3 சக்கர நாற்காலிகள் 3 மாற்றுத் திறனாளிகளுக்கும், கூட்டுறவுத் துறை சாா்பில் 29 பயனாளிகளுக்கு ரூ. 1,36,21,000 மதிப்பிலும் உள்பட மொத்தம் 126 பயனாளிகளுக்கு ரூ. 2.42 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

இந்த முகாமில் காஞ்சிபுரம் சரக கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு, காஞ்சிபுரம் கோட்டாட்சியா் பாலகிருஷ்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சுரேஷ், தாட்கோ மேலாளா் ராஜசுதா ஆகியோா் உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.