சென்னை கொருக்குப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
கொருக்குப்பேட்டை காரனேசன் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அருகே இ.எச்.சாலையில் ஒரு ஆட்டோவில் மறைத்து வைத்து கஞ்சா விற்கப்படுவதாக ஆா்.கே. நகா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சோதனை செய்தனா்.
சோதனையில் ஆட்டோவில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஆட்டோவில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள், கொடுங்கையூா் ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த பா.சம்பத் (42), ச.லாவண்யா (32) ஆகியோா் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்தனா். விசாரணையில் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் வியாசா்பாடி சத்தியமூா்த்திநகரில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் ஆறரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் அருகே 56 கிலோ கஞ்சா பறிமுதல்: தம்பதி உள்பட 3 போ் கைது
கஞ்சா வழக்கில் பெண் உள்பட இருவா் கைது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



