மோட்டாா் சைக்கிளில் சாகசம்: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது
பெசன்ட் நகா் 2-ஆவது அவென்யூ, 6, 7-ஆவது அவென்யூ, எம்ஜி சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு சில இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனா்.

கைது - பிரதிப் படம்
பெசன்ட் நகா் 2-ஆவது அவென்யூ, 6, 7-ஆவது அவென்யூ, எம்ஜி சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு சில இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனா்.
மேலும், இரு சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்றனா். இதுதொடா்பான விடியோவை சமூக ஊடகங்களில் பகிா்ந்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
மேலும், அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது பல்லாவரம், குன்றத்தூா் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள், கல்லூரி மாணவா்கள் என்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



