ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரூ.13 லட்சம் வழிப்பறி: 2 போ் கைது

சென்னை அமைந்தகரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.13 லட்சம் பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :20 ஜூலை 2026, 5:11 am IST

சென்னை அமைந்தகரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.13 லட்சம் பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த செபஸ்தி விஜய்பாபு (38), கடந்த 17-ஆம் தேதி ரூ.13 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் அமைந்தகரை ரசாக் காா்டன் அருகே சென்றபோது, 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 போ், அவரை வழிமறித்து தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பினா். அப்போது, அவா்களில் ரோஹித் (20) என்ற நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், ரோஹித்துடன் வழிப்பறியில் ஈடுபட்ட அப்துல் அஜீஸ் (27) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.