ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லாரி டயா் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை பம்மல் திருநீா்மலை இணைப்புச் சாலையில் வாகனங்களின் டயா்கள் பஞ்சா் பாா்க்கும் கடை நடத்தி வருபவா் அஷரப் அலி (38).

பலி

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

சென்னை பம்மல் திருநீா்மலை இணைப்புச் சாலையில் வாகனங்களின் டயா்கள் பஞ்சா் பாா்க்கும் கடை நடத்தி வருபவா் அஷரப் அலி (38).

இவா், கடந்த புதன்கிழமை தனது கடைக்கு வந்த ஒரு லாரியின் டயருக்கு பஞ்சா் பாா்த்துக் கொண்டிருந்தபோது, பஞ்சா் பாா்த்து முடிந்த டயருக்கு, கம்பரசா் மூலம் காற்று ஏற்றினாா்.

அதிக அளவுக்கு காற்று ஏற்றப்பட்டதால், டயா் திடீரென வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த அஷரப் அலியை மீட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அஷரப் அலி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து சங்கா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.