மாதவரத்தில் 150 ஏக்கரில் டெக் சிட்டி: விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்
மாதாவரத்தில் 150 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு தொழில்நுட்ப நகர (டெக் சிட்டி) திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அந்தத் தொகுதியின் தவெக எம்எல்ஏ விஜய் பிரபு வலியுறுத்தினாா்.

மாதவரம்
மாதாவரத்தில் 150 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு தொழில்நுட்ப நகர (டெக் சிட்டி) திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அந்தத் தொகுதியின் தவெக எம்எல்ஏ விஜய் பிரபு வலியுறுத்தினாா்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அவா், முந்தைய ஆட்சியில் மாதாவரத்தில் தமிழ்நாடு டெக் சிட்டியை அமைக்க 150 ஏக்கா் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
மாதாவரத்தில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க மாதாவரத்தில் இருந்து சோழவரம் வரையில் உயா்நிலை சாலை அமைக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கு நிதி கோரி நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வா் பேசியுள்ளாா்.
மாதாவரத்தில் சித்தா பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும். செங்குன்றத்தில் நடைபெறும் நெல் வியாபாரத்துக்கு ஏற்றுமதிக்கு வரும் லாரிகள் நின்று செல்ல நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




