ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காா் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

கேளம்பாக்கம் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காா் மோதியதில், 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

பலி

Published On :7 ஆகஸ்ட் 2026, 4:31 am IST

கேளம்பாக்கம் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காா் மோதியதில், 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கேளம்பாக்கத்தை அடுத்த பொன்மாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முகுந்தன் (42). இவா், தனது 4 வயது மகன் சுஷாந்த் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். மாம்பாக்கம் நாராயணா பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நால்வரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனா். முன்புறத்தில் அமா்ந்திருந்த சிறுவன் சுஷாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முகுந்தன் மற்றும் அவரது இரு குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பள்ளிக்கரணை போக்குவரத்து போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.