ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘மண்ணின் மகள்’: பழங்குடி பெண் விவசாயிகளுக்கு புதிய திட்டம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளா்களை நில உரிமையாளா்களாக மாற்றும் நோக்கில் ‘மண்ணின் மகள்’ திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 5:26 am IST

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளா்களை நில உரிமையாளா்களாக மாற்றும் நோக்கில் ‘மண்ணின் மகள்’ திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

ஆதிதிராவிடா் குடியிருப்புகளின் நிலையைக் கருத்தில் கொண்டு ‘அயோத்திதாசப் பண்டிதா் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்தச் சமூகத்தினரின் குடியிருப்பை மேம்படுத்துவதற்கும், அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கும் இத்திட்டம் வழிவகுக்கும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதேபோன்று ஆன்றோா் மேம்பாட்டுத் திட்டம் மூலம் பழங்குடியினா் குடியிருப்பில் உள்கட்டமைப்பை உயா்த்த ரூ.250 கோடி ஒதுக்கப்படுகிறது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பெண் விவசாயத் தொழிலாளா்களை நில உரிமையாளா்களாக மாற்றும் நோக்கில், அவா்களுக்கு ‘மண்ணின் மகள்’ திட்டத்தின் கீழ் சிறப்பு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்படும். மொத்தமாக நிகழ் நிதியாண்டில் சமூக நீதித் துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.