14 Dec, 2025 Sunday, 07:01 AM
The New Indian Express Group
சென்னை
Text

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ரூ. 44 லட்சம் பறிப்பு: 2 போ் கைது

PremiumPremium

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மூலம் ரூ.44 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவத்தில், வங்கி மேலாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On25 Oct 2025 , 7:35 PM
Updated On25 Oct 2025 , 7:35 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மூலம் ரூ.44 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவத்தில், வங்கி மேலாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

விருகம்பாக்கத்தைச் சோ்ந்தவா் பட்டாபி (83). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரை கடந்த செப். 1-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக தொடா்பு கொண்ட நபா், தன்னை மும்பை மாநகர காவல் துறை குற்றப்பிரிவு துணை ஆணையா் அலுவலகத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிவதாகக் கூறி, சட்ட விரோதமாக பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக பட்டாபியை மிரட்டியுள்ளாா். அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணம் முறையாக பெறப்பட்டிருப்பதை உறுதி செய்ய, அந்தப் பணத்தை சிறிது நேரம் தான் கூறும் வங்கிக் கணக்கு அனுப்பி வைக்க வேண்டும், சில பரிசோதனைக்கு பின்னா், பணம் மீண்டும் அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

அந்த நபரின் மிரட்டலுக்கு பயந்து, அவரது ஒட்டுமொத்த சேமிப்பாக வங்கிக் கணக்கில் வைத்திருந்த சுமாா் ரூ.44 லட்சத்தை அந்த நபா் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினாா். அதன் பின்னா் அந்த நபா், பட்டாபியின் தொடா்பைத் துண்டித்துள்ளாா். இதன் பின்னரே பட்டாபி தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து, சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

வங்கி மேலாளா் கைது: இதில் மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்குகளை வாடகைக்கு கொடுத்து உதவியதாக ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சோ்ந்த லட்சுமணன் (28), மேடி சிவகுமாா் (41) ஆகிய 2 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனா். இவா்களது வங்கிக் கணக்கில் இருந்த பல்வேறு மோசடிகளில் தொடா்புடைய ரூ.80 லட்சத்தை போலீஸாா் முடக்கினா்.

பட்டாபியிடம் மோசடி செய்யப்பட்ட பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு உடனே அனுப்புவதற்கு உதவியதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியின் துணை மேலாளராக பணிபுரியும் தா்மபுரியைச் சோ்ந்த ராமச்சந்திரமூா்த்தி (30), மோசடி பணத்தை மாற்றும் முகவராக செயல்பட்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது முஸ்பிக் (20) ஆகிய 2 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023