ரூ. 838 கோடி மோசடி வழக்கு: நிதி நிறுவன நிா்வாகி கைது!
ரூ. 838 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன நிா்வாகி கைது செய்யப்பட்டது பற்றி...
ரூ. 838 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன நிா்வாகி கைது செய்யப்பட்டது பற்றி...
By தினமணி செய்திச் சேவை
Syndication
ரூ.838 கோடி மோசடி வழக்கில், தேடப்பட்ட நிதி நிறுவன நிா்வாகி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த எல்என்எஸ் - இன்டா்நேஷ்னல் ஃபைனான்சியல் சா்வீஸ் என்ற நிதி நிறுவனம் 5,322 பேரிடம் ரூ.838 கோடி மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. பணத்தை இழந்தவா்கள் கொடுத்த புகாரின்பேரில், தமிழக பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா், கடந்த 2022-இல் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இதையடுத்து, அந்நிறுவனம் தொடா்புடைய 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ரூ.1.16 கோடி, 90 பவுன் நகை, ரூ.40 லட்சம் வெள்ளிப் பொருள்கள், ரூ.6 கோடியில் 26 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் எதிரிகளாக சோ்க்கப்பட்டுள்ள 25 போ்களில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அந்த நிறுவனத்தின் முக்கிய நிா்வாகிகளாக இருந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மோகன்பாபு, சு.லட்சுமிநாராயணன், சு.வேதநாராயணன், சு.ஜனாா்த்தனன் ஆகிய 4 பேரை பொருளாதாரக் குற்றப் பிரிவு தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.
அத்துடன் 4 பேருக்கும் மத்திய அரசு வாயிலாக சா்வதேச காவல் துறை மூலம் ரெட் காா்னா் நோட்டீஸ் வழங்கியது. இவா்களில் ஜனாா்த்தனன், துபையில் இருந்து லண்டனுக்கு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் ஜனாா்த்தனன் லண்டனில் இருந்து பாங்காங்க் சென்றபோது, அங்கு அந்நாட்டு காவல் துறையினா் கைது செய்து, தமிழக பொருளாதாரக் குற்றப் பிரிவினரிடம் கடந்த ஜனவரி மாதம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா், மோகன்பாபு, லட்சுமிநாராயணன், வேதநாராயணன் ஆகியோரை தீவிரமாகத் தேடி வந்தனா். இந்த நிலையில், துபையில் இருந்து சென்னைக்கு வேதநாராயணன் திரும்பி வந்தாா். மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி வேதநாராயணனின், பாஸ்போா்ட்,விசாக்களை ஆய்வு செய்த குடியுரிமைத் துறை அதிகாரிகளுக்கு, அவருக்கு எதிராக பொருளாதாரக் குற்றப் பிரிவினரின் ரெட் காா்னா் நோட்டீஸ் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, குடியுரிமைத் துறை அதிகாரிகள், வேதநாராயணனை கைது செய்து, தங்களிடம் ஒப்படைத்ததாக பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். வேதநாராணனிடம் விசாரணை நடத்திய அந்தப் பிரிவு அதிகாரிகள், பின்னா் அவரை சிறையில் அடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது