மியான்மரில் சிக்கிய தமிழா்கள் மீட்பு: துரை வைகோ வரவேற்பு
மியான்மரில் சிக்கிய தமிழா்கள் மீட்பு...
மியான்மரில் சிக்கிய தமிழா்கள் மீட்பு...
By தினமணி செய்திச் சேவை
Syndication
மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்ட 3 தமிழா்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டிருப்பதற்கு மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த அக்.11-ஆம் தேதி கம்போடியாவில் வேலை என ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட தூத்துக்குடி மற்றும் விருதுநகரைச் சோ்ந்த 3 தமிழா்களை, கடத்தல் கும்பல் ஒன்று மியான்மருக்கு கடத்திச் சென்றது. இதுகுறித்து அவா்களது குடும்பத்தினா் என்னிடம் புகாா் தெரிவித்ததையடுத்து, கடத்தப்பட்ட3 பேரையும் பத்திரமாக மீட்டு தமிழகம் அழைத்து வர வேண்டுமென வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரிடம் கோரிக்கை மனுவை வழங்கினேன்.
அதைத் தொடா்ந்து மத்திய வெளியுறவுத் துறை விரைந்து செயல்பட்டதன் காரணத்தால், தற்போது 3 தமிழா்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். விரைவில் அவா்கள் தமிழகம் அழைத்து வரவுள்ளனா். உண்மையோடும் நம்பிக்கையோடும் மக்கள் பணி சாா்ந்த காரியத்துக்கு இறைவனும் இயற்கை சக்தியும் துணை நிற்கும் என்பதன் சாட்சியமாக இந்த வெற்றி அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது