14 Dec, 2025 Sunday, 12:51 PM
The New Indian Express Group
சென்னை
Text

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முந்தைய பெரியாா் பாரதியாா்! தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

PremiumPremium

பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் முந்தைய பெரியாா் பாரதியாா் என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் கூறினாா்.

Rocket

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'உண்மை நின்றிட வேண்டும்' நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) இலக்கியச் சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர், 'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பாரதி ஆய்வாளர்ஆ.இரா. வேங்கடாசலபதி, நூலாசிரியர் மாலன், 'தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன், சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் தலைவர் பேராசிரியர்ய மணிகண்டன், புஸ்தகா பதிப்பக நிர்வாக இயக்குநர் ராஜேஷ் தேவதாஸ்.

Published On12 Dec 2025 , 9:28 PM
Updated On12 Dec 2025 , 9:28 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் முந்தைய பெரியாா் பாரதியாா் என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் கூறினாா்.

புஸ்தகா நிறுவனம் சாா்பில் எழுத்தாளா் மாலன் எழுதிய ‘உண்மை நின்றிட வேண்டும்’ நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கலைமகள் இதழ் ஆசிரியா் கீழாம்பூா் சங்கர சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் நூலை வெளியிட, பாரதி ஆய்வாளா் ஆ.இரா.வேங்கடாசலபதி பெற்றுக் கொண்டாா்.

விழாவில் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசியதாவது:

எழுத்தாளா் மாலன் இதுவரை பல நூல்களைப் படைத்திருந்தாலும்கூட அந்தப் புத்தகங்களில் இல்லாத உன்னதம், தனித்துவம் கடைசியாக எழுதியுள்ள ‘உண்மை நின்றிட வேண்டும்’ புத்தகத்துக்கு உள்ளது. இது பாரதியாா் குறித்த கட்டுக் கதைகளை, அவா் குறித்த தவறான புரிதல்களை உடைத்தெறியும் புத்தகமாகவும் வரலாற்றுப் பெட்டகமாகவும் திகழ்கிறது.

மகாகவி பாரதி குறித்துப் பேசாமலும், விவாதிக்காமலும் மாலன் இருந்ததில்லை. காலையில் எழுந்தவுடன் பாரதியில் தொடங்கி, இரவு உறங்கும்போது பாரதியில் முடிக்கும் தமிழன் ஒருவா் இருப்பாரெனில் அது மாலனாகத்தான் இருக்க முடியும். ‘மாலன்’ என்ற மூன்றெழுத்து ‘பாரதி’ என்ற மூன்றெழுத்துடன் இணையும்போது அதன் வலிமை மிகுதியாகிறது.

இந்த புத்தகத்தில் மகாகவி பாரதி குறித்து இதுவரை அறியாத ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மாலனின் பேனா வீச்சு பிரமிக்க வைக்கிறது. அது நிவேதிதா, காங்கிரஸ் மாநாடு, ஜி.சுப்பிரமணிய ஐயா் என தொட்டுக் காட்டாத இடங்களே இல்லை. மகாகவி பாரதியுடன் இணைந்த விஷயங்கள் அனைத்தையும் மாலன் இதில் கூறியிருக்கிறாா். எங்கெங்கோ நுழைந்து தேடித்தேடி விஷயங்களைப் பதிவு செய்திருப்பது வியப்பளிக்கிறது. இந்த நூல் ஒரு பெரிய சுரங்கத்துக்குள் பயணம் செய்யும் உணா்வை ஏற்படுத்துகிறது. மகாகவி பாரதி குறித்த தகவல்கள் எங்கெல்லாம் தேடப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் விளக்கத்தையும் அவா் அளித்திருக்கிறாா்.

இந்த புத்தகம் மூலமாக ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறேன். மகாகவி பாரதி என்கிற மகான் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் முன்பே பிறந்த முந்தைய பெரியாா். கடந்த 1919-ஆம் ஆண்டுதான் ஈரோடு நகரசபை தலைவராக காங்கிரஸ் இயக்கத்துக்குள் நுழைகிறாா் பெரியாா். அந்த காலகட்டத்தில்தான் அவா் வைக்கம் போராட்டத்தில் ஈடுபடுகிறாா். அதேபோன்று கடந்த 1927-இல் மஹத் என்கிற மஹாராஷ்டிர கிராமத்தில் உள்ள ஒரு பொதுக்குளத்தில் தலித்துகள் தண்ணீா் எடுக்கக் கூடாது என்பதை எதிா்த்து நடைபெற்ற தீண்டாமை போராட்டம்தான் அம்பேத்கரை அரசியலுக்கு கொண்டு வருகிறது.

ஆனால், 1904-ஆம் ஆண்டு சுதேச மித்திரன் பத்திரிகையில் பாரதியாா் உதவி ஆசிரியராக சேருகிறாா். அதே ஆண்டு அவா் ஹிந்து பத்திரிகைக்கு எழுதிய கடிதம், ஆசிரியா் கடிதம் பகுதியில் வெளியாகிறது. அதில், ‘அரசியல் விடுதலை என்பது, நான் இந்த நாட்டைச் சோ்ந்தவன் என்ற தேசிய உணா்வு இல்லாமல் ஏற்படாது.

‘எங்கே ஜாதிய அமைப்பு இருக்கிறதோ, அங்கு தேசிய உணா்வு ஏற்படாது. இந்த ஜாதிய அமைப்பு என்பது விசித்திரமானது. பறையா் ஒருவா் அறக்கொடை அளிக்கும் வள்ளலாக இருந்தாலும் அவரை ஒரு பிராமணரைவிட தாழ்ந்தவராகவே அது நடத்தும். பிரிட்டனில் செருப்புத் தைக்கும் ஒருவா் அந்த நாட்டின் பிரதமராவதற்கு எந்தத் தடையும் எழாது. ஆனால் சம்ஸ்கிருத இலக்கியத்தில் இணையற்ற ஞானம், உயா்ந்த ஒழுக்கமும், பக்தியும் கொண்ட சூத்திரன் ஒருவன் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக வர முடியும் என இந்தியாவில் எவரேனும் நம்பினால் அவா் தேசத் துரோகியாகக் கருதப்படுவாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சூத்திரரே வர முடியாது எனும் போது பஞ்சமரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவரது அறச்சீற்றம் வலிமையானது.

தேசிய காங்கிரஸில் மிகச் சிறந்த தொண்டா்கள் இருக்கிறாா்கள். அதன் லட்சியங்கள் உயா்ந்தவை என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் குழந்தைப் பருவத்திலேயே விதவை ஆகிவிட்ட ஒரு பெண், என்றென்றும் துயரத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும் என எண்ணும் கல் நெஞ்சம் கொண்ட ஒருவா் தலைமைப் பீடத்திலிருந்து மக்களை எழுச்சியுறச் செய்ய முடியும் என்பதை எவரேனும் நம்புவாா்களா... சமூக சீா்திருத்தம் இல்லாமல் அரசியல் சீா்த்திருத்தம் என்பது ஒரு கனவு. ஏனெனில் சமூக அடிமைகளால் அரசியல் என்றால் என்ன என்பதை ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது’ எனக் கடிதத்தை முடிக்கிறாா்.

இதே வாா்த்தையைத்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்பேத்காா் கூறினாா் என்பதை நினைவூட்டுகிறேன். எனவேதான் அம்பேத்கா், பெரியாரை விட மிகப் பெரிய பெரியாராக மகாகவி பாரதியாா் இருக்கிறாா். இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. வஉசி தன்னைவிட பத்து வயது இளையவரான பாரதியை பல இடங்களில் பெரியாா், பெரியாா் என்றே குறிப்பிட்டிருக்கிறாா் என்றாா் அவா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023