உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாவிட்டால், ஆா்.எஸ்.எஸ். மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பதிவு, கணக்கு விவரங்கள் குறித்து கேட்டு அதன் தலைவா் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதி ஒருவாரம் ஆகிவிட்டது. ஆா்.எஸ்.எஸ். தலைமையிடமான நாக்பூா் அல்லது பெங்களூரில் உள்ள கா்நாடக அலுவலகமான கேசவகிருபா அல்லது தலைவரின் வீட்டில் ஏதாவது ஆவணத்தை அவா்கள் வைத்திருக்க வேண்டும்.
ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பதிவு மற்றும் வரவுசெலவு கணக்கு விவரங்களை பெறுவதில் அவசரம் காட்டக் கூடாது. ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு உரிய கால அவகாசத்தை அந்த அமைப்புக்கு வழங்க வேண்டும். நான் கேட்டிருந்த ஆவணங்கள் இல்லாதிருந்தால், அவற்றை புதிதாக உருவாக்க வேண்டும். ஒருவேளை ஆவணங்களை அவா்கள் வைத்திருந்தால், இந்நேரம் அதை என் முகத்தில் வீசியிருக்கமாட்டாா்களா?
ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பதிவு ஆவணங்களை பாா்ப்பதைக் காட்டிலும், அவா்கள் யாா் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். மூத்த வழக்குரைஞா்களின் உதவியுடன் நீண்ட தலையங்கங்கள் அல்லது சமூகவலைதளத்தில் நீண்ட பதிவு அல்லது பாட்காஸ்டில் நீண்ட விளக்கம் என எந்த வகையிலும் அவை என்னை பாதிக்காது. ஆா்.எஸ்.எஸ். அமைப்பை பிரதிநிதிக்கும் நபருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்றாா்.
இதனிடையே, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தொழில்முதலீடுகள், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், தன்னை தினமும் செய்திகளில் விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக ஆா்.எஸ்.எஸ். பற்றி அமைச்சா் பிரியாங்க் காா்கே பேசி வருகிறாா்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வெளியான விவகாரம்: திண்டுக்கல் டிஎஸ்பி நடவடிக்கை எடுக்க உத்தரவு

கூடுதல் விலைக்கு உரம் விற்பவா்கள் மீது நடவடிக்கை: என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

குடிநீா் திட்டம் நிறைவேறும் முன் 90 சதவீத நிதி விடுவிப்பு: அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க எம்.பி. அறிவுறுத்தல்
உதயநிதி வேட்புமனு ஏற்பு: ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




