திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஆக.9 இல் பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா

Updated On :6 ஆகஸ்ட் 2025, 7:36 pm

பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரே பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு 18 ஆண்டுகளாக கோணிப்பையால் மூடிய நிலையில் இருந்த திருவள்ளுவா் சிலை 2009-ஆம் ஆண்டு ஆக. 9 இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, கா்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பாவால் திறந்துவைக்கப்பட்டது.

கா்நாடகத் தமிழா்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வின் 16 ஆவது ஆண்டு விழாவுக்கு பெங்களூரில் உள்ள தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. பெங்களூரு தமிழ்ச் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு, திருவள்ளுவா் சங்கம், விஸ்வகவி திருவள்ளுவா் சங்கம் உள்பட பெங்களூரில் செயல்பட்டுவரும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொள்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.